மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்த ஒருவார காலமாக நடந்து வந்த போராட்டம் இன்று போர்க்களமாக மாறி வருகிறது. போராட்டாக்காரர்கள் ஒவ்வொரு ஊராக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். சில இடங்களில் தடியடியும் நடந்தது. மெரினாவில் விவேகானந்தா மண்டபம் முன்பு நடந்த போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் கடலில் இறங்கி போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆரம்பத்தில் இருந்தே போராட்டாக்காரர்களுடன் களமிறங்கி அவர்களுக்கு உறுதுணையாக இருந்து போராடி வந்த நடிகர் ராகவா லாரன்ஸ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் மெரினாவில் போலீசார் மாணவர்களை அப்புறப்படுத்திய செய்தியை அறிந்த லாரன்ஸ், போராட்ட களமான மெரினா செல்ல விரைந்தார். ஆனால் போலீசார், லாரன்ஸை தடுத்து நிறுத்தினர். எனவே லாரன்ஸ் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.