விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்க வேண்டும் என்று தமிழகம் மட்டுமின்றி, உலகத்தில் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை மெரினா பீச், அலங்கா நல்லூர் பகுதிகளில் பெருந்திரளாக இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பெண்களும், குழந்தைகளும்கூட அமைதியான அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை உலகமே வியப்பில் உற்று நோக்கி வருகிறது.
இந்த நிலையில், பீட்டா அமைப்பில் இடம்பெற்றிருக்கும் ராதாராஜன் என்ற பெண்மணி, இந்த அறவழிப் போராட்டத்தை, ப்ரீ செக்ஸ் -என்ற வார்த்தையை முன்வைத்து கொச்சைப்படுத்தியிருந்தார். அதைப்பார்த்து அனைவருமே கொதித்தெழுந்தனர். அதோடு ஆண்களும், பெண்களும் அவருக்கு எதிராக குரல் கொடுத்தனர். அதையடுத்து அவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் நேற்று அதற்கு அவர் மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில், காமெடியன் சதீஷ், பீட்டாவுக்கு எதிராக போராடும் எங்களை ஒரு பாட்டிக்கு எதிராக போராட வைத்து விட்டீர்களே. ராதாராஜன் தவறான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.