மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். இவரது மகன் கவின் சிவா, மெய்மறந்தேன், ஜெயிக்கிற குதிரை ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில், ஜெயிக்கிற குதிரை படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்க ஜீவன் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது இந்த இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன.
இந்த படங்கள் குறித்து கவின் சிவா கூறுகையில், மெய்மறந்தேன் படத்தில்தான் நான் இசையமைப்பாளராக அறிமுகமானேன். அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அதையடுத்து ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள ஜெயிக்கிற குதிரை படத்திற்கு தற்போது இசையமைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த படத்தில் மெலோடி, செண்டிமென்ட், குத்துப்பாட்டு என அனைத்து விதமான பாடல்க ளுக்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் அம்மா இறந்து விடும் சூழலில் ஒரு செண்டிமென்ட் பாடல் இடம்பெற்றுள்ளது.
அந்த பாடலின் சூழலைக்கேட்டதும், சோலை பசுங்கிளியே -என்ற இசைஞானியின் அற்புதமான பாடல்தான் என் மனதிற்குள் ஒலித்தது. அந்த பாடலுக்கு எனது பாணியில் உருக்கமாக இசையமைத்துள்ளேன். அதற்கு எனது தந்தையான கவிஞர் பிறைசூடனே பாடல் எழுதியிருக்கிறார். வீட்டுக்கொரு சாமி உண்டு அம்மா அம்மாதான், கோயில் குளம் போறதெல்லாம் சும்மா சும்மாதான் -என்று தொடங்கும் அந்த பாடல் அனைவருக்குமே பிடிக்கும். அற்புதமான வரிகளாக அமைந்துள்ளன. அதனால் இந்த படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர் களையும் எனது பாடல்கள் போய் சேர்ந்து என்னை பிரபலப்படுத்தும் என்று எதிர்பார்த்திருக்கிறேன் என்கிறார் இசையமைப்பாளர் கவின்சிவா.