ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் 4 நாட்களுக்காக போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த நடிகர் லாரன்ஸ் திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜல்லிக்கட்டு நடத்த கோரி மெரினா கடற்கரையில் 4 நாட்களாக லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், பெண்களும் அதிகளவில் கலந்துகொண்டுள்ளனர். நடிகர் லாரன்ஸ் போராட்டத்தின் முதல் நாளே மெரினாவிற்கு வந்து ஆதரவு தெரிவித்தார்.
போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களுக்காக உணவு, குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும், டாய்லெட் வசதி உள்ள 5 கேரவன்களை மெரினாவிற்கு கொண்டு வர உதவி செய்தார். இது, போராட்டத்தில் உள்ள பெண்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.
நடிகர் லாரன்சுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கழுத்தில் பேன்ட் அணிந்து தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில், 4 வது நாளான இன்று காலை 11.30 மணியளவில் திடீரென லாரன்ஸ் மயங்கி விழுந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.