மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டாத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஆரம்பத்திலேயே தனது முழு ஆதரவை தெரிவித்து வருவதோடு சென்னை மெரினா கடற்கரையில் அலைகடல் என திரண்டிருக்கும் போராட்டாக்காரர்களுக்கு நேரடியாக சென்று தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். இதுதொடர்பாக எவ்வளவு செலவானாலும் சரி, ஒரு கோடியானாலும் நானே தருகிறேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் போராட்ட களத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் களத்தில் இறங்கி போராடி வருகின்றனர். அவர்களுக்கு இயற்கை உபாதைகள் கழிக்க சிரமமாக இருப்பதால் டாய்லெட்டு உள்ள 5 கேரவன்களை ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளர் கொண்டு வந்தார். லாரன்ஸின் வேண்டுகோளுக்கு இணங்க இதை அனுப்பி வைத்ததாக சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.
மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன், போராட்டம் செய்கிறேன்... என்று மாணவர்களின் கிரெடிட்டை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் திரையுலகினர் மத்தியில் இளைஞர்களோடு சேர்ந்து தானும் இதுபோன்று களத்தில் களமிறங்கி வேலை செய்யும் ராகவா லாரன்ஸை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.