நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் |
ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் தமிழகத்தில் அடுத்த லெவலுக்கு சென்று கொண்டு இருக்கிறது. திரையுலகின் பல பிரபலங்களும் ஜல்லிக்கட்டு தொடர்பாக தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ரஜினி, கமல், விஜய், சிவகார்த்திகேயன், சிம்பு, ஜெயம் ரவி, விஷால், ஆர்யா... என பலரும் ஆதரவு தெரவித்துள்ளனர். பல நடிகர்கள் களத்தில் இறங்கி போராடியும் வருகின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் நடிகர் அஜித், இதுவரை ஒரு சின்ன அறிக்கை கூட வெளியிடாமல் இருக்கிறார். இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து நடிகர்களும் பங்கேற்பார்கள் என பொன்வண்ணன் தெரிவித்திருக்கிறார். நாளை நடைபெறும் போராட்டத்தில் அஜித் பங்கேற்பாரா...? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், நிச்சயம் அவர் நாளை நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பார் என அஜித்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்பட தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்...!