ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் - நடிகைகள் நடிக்க வரும்போது அவர்களிடம் இயக்குனர்கள்தான் இந்த மாதிரியெல்லாம் நடிக்க வேண்டும் என்று கண்டிசனாக பேசி புக் பண்ணுவார்கள். ஆனால் அதே நடிகர் நடிகைகள் பெரிய அளவில் வளர்ந்து விட்டால் அதன்பிறகு அவர்கள் டைரக்டர்களிடம், இந்த மாதிரி கதைகளில், இந்த மாதிரியான வேடங்களில்தான் நடிப்பேன் என்று கண்டிசன் போட்டு நடிப்பார்கள். குறிப்பாக, சிலர் மொத்த கதையையும் கேட்டு விட்டு காட்சிகளிலும் நிறைய திருத்தம் செய்வார்கள்.
அந்தவகையில், நடிகை நயன்தாரா தற்போது கதையை சீன் பை சீன் கேட்பதோடு முக்கிய காட்சிகளின் டயலாக்குகளையும் கேட்கிறார். அதோடு, கதைகளை கேட்பதற்கு முன்னதாக ஒரு மூன்று கண்டிசன்களை தனது சார்பில் டைரக்டர் கள் முன்பு எடுத்து வைக்கிறார். அது என்னவென்றால், எக்காரணம் கொண்டும் உதட்டு முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன். குளியல் காட்சியில் நடிக்க மாட்டேன். மேலும், தொடைக்கவர்ச்சியை காண்பிக்க மாட்டேன் என்பதுதான் அந்த கண்டிசன்கள். இருமுகன் படத்திற்கு பிறகு இந்த மாதிரியான கண்டிசன் களை போட்டு கதை கேட்கும் நயன்தாரா, சென்சார்போர்டில் காட்சிகளை கத்தரிப்பது போன்று டைரக்டர்கள் கதை சொல்லும்போதே கத்தரி போட்டு வருகிறார்.