மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்ததோடு ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு தமிழ்நாட்டு அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த பேச்சு பற்றி சரத்குமார் கூறியிருப்பதாவது... தமிழ் நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக ரஜினி கூறியிருக்கிறார். அப்படி எந்த சூழ்நிலையும் இங்கு உருவாகவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்று திறம்பட கட்சியை நடத்துகிறார். கட்சி பிளவுபடும் என்ற எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருப்பதால் அவதூறு பரப்புகிறார்கள். ரஜினி எனது தனிப்பட்ட நண்பர் ஆனால் அவர் அரசியலுக்கு வந்தால் அவரை எதிர்த்து நிற்பேன். பீட்டா அமைப்பில் இருக்கும் வெளிமாநில நடிகர், நடிகைளுக்கு தமிழ் கலாச்சாரம் பற்றிய அறிவு இல்லை. ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேச அவர்களுக்கு உரிமையும் இல்லை. என்றார் சரத்குமார்.
சரத்குமாரின் இந்த பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு ஆங்காங்கே அவரது உருவ பொம்மையை எரித்தனர்.