பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் |
மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், இதயக்கனி, புரட்சித் தலைவர், கொடைவள்ளல் என்றெல்லாம் அவரது ரசிகர்களால் வாயார புகழப்பட்டவர் மறைந்த முதல்வரும் அதிமுக தலைவருமான எம்ஜிஆர். எம்ஜிஆர்-ன் 100வது பிறந்தநாள் நாளை(ஜன., 17-ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதிமுக., கட்சியிலும் சரி, திரையுலகத்திலும் சரி எம்ஜிஆரின் நூறாவது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட உள்ளனர். குறிப்பாக தமிழ் சினிமா சார்பில் எம்ஜிஆரின் பிறந்தநாளை ஆண்டு முழுக்க கொண்டாட உள்ளனர். அதன் ஒருபகுதியாக நாளை சென்னை அபிராமி தியேட்டரில் எம்ஜிஆர்., நூற்றாண்டு விழா நடைபெற இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், நடிகர் சங்கம், கில்டு, பெப்சி உள்ளிட்ட அனைத்தும் சங்கங்களும் இணைந்து இந்த விழாவை நடத்துகிறார்கள். இந்த விழாவை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார். எம்ஜிஆர்., திறந்து வைத்த தியேட்டர் அபிராமி என்பதால் இங்கு விழாவை நடத்துகிறார்கள். தொடர்ந்து எம்ஜிஆர்., நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது. பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து திரையுலகினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.