ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
அனுபவமில்லாமல் பணத்துடன் படத்துறைக்கு வரும் பலரும் கடைசியில் நஷ்டத்தையே சந்திக்கின்றனர். சினிமா உலகின் நெளிவுசுளிவுகள் தெரியாததினால் இப்படி வருபவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். 650 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலைக் குவித்து, இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம் ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது.
பாகுபலி-2 படத்தின் தமிழ் பதிப்பின் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை 'கே.புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. இதே நிறுவனம் கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம்-2' படத்தின் தமிழக விநியோக உரிமையையும் வாங்கியிருந்தது. 'விஸ்வரூபம்-2' படம் எப்போது வெளியாகும் என்றே தெரியாதநிலையில் கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதலீடு முடங்கிப்போனது.
இந்த படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கி வரும், 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் விநியோக உரிமையையும் கே.புரொடக்ஷன்ஸ் வாங்கியுள்ளது. தனுஷ் - கௌதம் மேனன் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக எனை நோக்கி பாயும் தோட்டா பட பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் இந்த படங்களை வெளியிடுவதன் மூலம் தமிழ் சினிமாவில், கவனிக்கத்தக்க நிறுவனமாக வளர நினைத்தது கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம். ஆனால் வாங்கிய இரண்டு படங்களும் பிரச்சனையில் சிக்கியிருப்பதால் கவலையில் ஆழ்ந்துள்ளது கே.புரடக்ஷன்ஸ்.