விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
ரஜினியின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் '3' படத்தின் மூலம் இயக்குநரானார். '3' படத்திற்குப் பிறகு னௌதம் கார்த்திக்கை வைத்து 'வை ராஜா வை' என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் படு தோல்வியடைந்ததை அடுத்து படம் இயக்குவதை தற்காலிகமாக ஒத்தி வைத்திருந்தார். அதே நேரம் சினிமா ஸ்டன்ட் கலைஞர்களின் வாழ்க்கை பற்றிய 'சினிமா வீரன்' என்ற டாக்குமென்ட்ரி படத்தை உருவாக்கி வந்தார்.
இந்நிலையில் தற்போது, அவர் இயக்கவிருக்கும் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் நடந்த ரியோ டி ஜெனிரோவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாராலிம்பிக்' போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றவர் தமிழ்நாட்டை சேர்ந்த தங்கவேலு மாரியப்பன். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பயோபிக் என்ற ஸ்போர்ட்ஸ் படம் ஒன்றை இயக்குகிறார் ஐஸ்வர்யா தனுஷ். அந்தப் படத்துக்கு 'மாரியப்பன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்திற்கான வசனங்களை குக்கூ, ஜோக்கர் புகழ் ராஜு முருகன் எழுதுகிறார்.
தமிழ், ஆங்கிலம் என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகிறது. ஐஸ்வர்யா தனுஷ் திடீரென மாரியப்பன் கதையை படமாக எடுப்பது ஏன்? எல்லாம் காரணமாகத்தான். சமீபகாலமாக பாலிவுட்டில் விளையாட்டு சம்பந்தமான பயோபிக் படங்கள் ஹிட்டாகி வருகின்றன. அதிலும் கடந்தவாரம் வெளியான அமீர்கான் நடித்த ஸ்போர்ட் படமான தங்கல் சூப்பர்ஹிட்டாகி பல கோடி வசூலித்திருக்கிறது. அந்த இன்ஸ்பரேஸனால் இப்போது மாரியப்பன் வாழ்க்கையை படமாக எடுக்க முடிவெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா என்கிறார்கள்.