மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் |
யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் படம் பார்த்து தாயம் என்ற படத்தை இயக்கி இருக்கிறார் என்ஜினீயர் கண்ணன் ரங்கஸ்வாமி. ஒரே அறைக்குள் நடக்கும் ஹாலிவுட் பாணியிலான படம். பியூச்சர் பிலிம் பேக்டரி சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்துள்ளார். பாக்யராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சதீஷ் செல்வம் இசை அமைத்துள்ளார். படத்தைப் பற்றி இயக்குனர் கண்ணன் ரங்கஸ்வாமி கூறியதாவது:
ஒரே அறைக்குள் படம் எடுப்பது ஹாலிவுட்டில் அதிகம். அடிக்கடி அது மாதிரி படங்கள் வெளிவரும். ஆனால் தமிழில் இது புதிய முயற்சி. ஒரு பெரிய நிறுவனம் தனது நிறுவனத்துக்கு தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்ய இண்டர்வியூ நடத்துகிறது. அந்த இண்டர்வியூவே ஒரு அறையில் ஒரு நாள் தங்க வேண்டும் என்பதுதான். அந்த அறைக்குள் ஒரு பேய் இருக்கிறது. அந்த பேயை அவர்கள் சமாளிக்க வேண்டும். சமாளித்து உயிருடன் திரும்பி வந்தால் வேலை.
இந்த சவாலை இரண்டு பெண்கள் உள்பட 8 பேர் ஏற்கிறார்கள். ஒவ்வொருவராக அந்த அறைக்குள் செல்கிறார்கள். யாருக்கு என்ன நடக்கிறது. யார் யார் உயிர் பிழைத்தார்கள் என்பதுதான் கதை. 15 நாளில் படத்தை எடுத்து முடித்து விட்டோம். ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். என்றார் கண்ணன் ரங்கஸ்வாமி.