மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ் சினிமாவின் முக்கிய நாயகிகளில் ஒருவர் நடிகையர் திலகம் சாவித்ரி. முதன் முதலில் விலை உயர்ந்த கார் வாங்கியவர், பங்களா கட்டியவர், அதிக சம்பளம் வாங்கியவர். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்தவர் அவர்தான். முதன் முறையாக சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, போதை பழக்கத்துக்கு அடிமையாக கொடூரமாக மரணம் அடைந்தவரும் அவர்தான். அவரது வாழ்க்கையை தற்போது நாக் அஸ்வின் என்ற தெலுங்கு இயக்குனர் படமாக தயாரித்து இயக்குகிறார்.
படத்தின் திரைக்கதையை எழுதி முடித்து சாவித்ரி குடும்பத்தினரிடம் அனுமதியும் பெற்று விட்டார். ஆனால் சாவித்ரியாக நடிக்க தென்னிந்திய மொழிகளுக்கு அறிமுகமான முன்னணி நடிகையை தேடினார். அனுஷ்கா, வித்யாபாலன், நயன்தரா, காஜல் அகர்வால் நித்யாமேனன் என பல நடிகைகளை அணுகினார். சாவித்ரி கேரக்டரில் நடிக்க ஆர்வமாக வந்தவர்கள். கதையை கேட்டவுடன் நடிக்க தயங்கியதாக கூறப்படுகிறது. கடைசியாக நித்யா மேனன் ஓகே சொல்லி சாவித்ரியின் பழைய படங்களை பார்க்க ஆரம்பித்தார். ஆனாலும் அவர் கடைசி நேரத்தில் விலகிக் கொண்டார்.