'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
ஜெயம் படத்தில் தமிழில் அறிமுகமானவர்; ஷங்கர் படத்தில் ஹீரோயினாக நடித்தவர்; சிறிது இடைவெளிக்கு பின், மீண்டும் கோலிவுட் பக்கம் தென்படுகிறார். எல்லா படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது இல்லை; நல்ல படங்களில் மட்டும் நடித்தால் போதும் என்பது, சதாவின் தற்போதைய பாலிசி. இப்போது, டிவி சேனல் நடத்தும் நடன நிகழ்ச்சிகளில், நடுவர் அவதாரம்
எடுத்துள்ளார். சதாவுடன் ஒரு சந்திப்பு:அதற்குள், டிவி பக்கம் வந்துட்டீங்களே; படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையா?
அப்படி எதுவுமில்லை. உப்பு சப்பில்லாத கதை அம்சம் உடைய படங்களில் நடிப்பதை விட, நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என, நினைக்கிறேன். தமிழில், இப்போது தான், டிவி நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். ஆனால், தெலுங்கில் பல ஆண்டுகளாக, டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன்.
டி.ராஜேந்தருடன் நடுவராக பணியாற்றுவது குறித்து?
தெலுங்கில், ஒரு, டிவி நிகழ்ச்சியில், அவர் நடுவராக இருந்தார். அப்போது, நானும் அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இருந்தேன். எங்களுக்குள் அப்போதே அறிமுகம் இருந்தது. அவர், ரொம்ப புத்திசாலி; திறமைசாலி. அவருக்கு எல்லா விஷயங்களுமே அத்துபடி; அவருடன் சேர்ந்து, பணியாற்றுவது நல்ல அனுபவம்.
உங்கள் சினிமா பயணம் திருப்தியா இருந்ததாக நினைக்கிறீரா?
கண்டிப்பாக; சவாலான வேடங்களில் அதிகம் நடித்தேன். சில நல்ல படங்களில் நடித்திருக்கிறேன் என்ற திருப்தி உள்ளது.
ஜெயம் படம் ரிலீஸ் ஆன போது, உங்க, டயலாக் பெரிதாக பேசப்பட்டதே ?
ஆமாம்; தெலுங்கிலும், அந்த படத்தில் நான் தான் நடித்திருந்தேன். அதை, தமிழில் எடுக்கப் போவதாகவும், அதிலும் நானே ஹீரோயினாக நடிக்கப் போவதாகவும் கூறிய போது, என்னால்
நம்பவே முடியவில்லை. இந்த படத்தில் நடித்த போது இருந்த ஜெயம் ரவி வேறு; இப்போதுள்ள ஜெயம் ரவி வேறு.
ஷங்கர் படத்தில் நடித்தது குறித்து...
அந்நியன் படத்தில் நடிக்க என்னை அழைத்ததும், முதலில் நம்பவே இல்லை; ஏனெனில், ஜெயம் படம், அப்போது தான் வெளியாகி இருந்தது. படப்பிடிப்பு துவங்கிய பின் தான், நம்பினேன். திரும்பவும், அது போன்ற வாய்ப்பு கிடைக்குமா என, தெரியவில்லை. உண்மையிலேயே, நான் அதிர்ஷ்டசாலி தான் என்று சொல்ல வேண்டும்.
ஷங்கர் படத்தில் நடித்தும், உங்களால் அடுத்த லெவலுக்கு போக முடியவில்லையே; ஏன்?
அது, ரொம்ப சிக்கலான சமயம். அப்போது, பல படங்கள், அடுத்தடுத்து, என்னை தேடி வந்தன. அந்நியன் வந்த, அடுத்த சில மாதங்களிலேயே, மூன்று ஹிந்தி படங்களில் நடிக்க, ஒப்பந்தம் போடப்பட்டது. அடுத்த ஒரு ஆண்டுக்கு, பாலிவுட்டிலிருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை. ஆனாலும், சதாவுக்கு தமிழில் நடிக்க விருப்பமில்லை என்பது போன்ற செய்திகள் பரப்பரப்பட்டன. இதனால், பல வாய்ப்புகளை இழந்தேன்.
பல மொழிகளிலும் நடித்திருந்தாலும், சரியான படங்களில் நடிக்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளதா?
அப்படி எதுவுமில்லை; சந்தோஷமாகத் தான் இருந்திருக்கிறேன். சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த நான், இவ்வளவு படங்களில் நடித்திருக்கிறேன் என்பதே பெரிய விஷயம்; அதிலும், குறுகிய காலத்திலேயே, பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்திருக்கிறேன். அதனால், என் திரையுலக வாழ்வு, இதுவரை திருப்தியாக இருந்ததாகவே கருதுகிறேன்.சினிமாவில் உங்கள் நெருங்கிய நண்பர்கள்...அப்படி யாரும் இல்லை; எனக்கு நட்பு வட்டாரம் ரொம்ப குறைவு.
திடீர்னு, வடிவேலு கூட ஜோடியா நடிச்சிங்களே ?
ஏன், வடிவேலு கூட நடிக்கக் கூடதா; அவர் நல்ல நடிகர். அந்த படத்தை பொறுத்தவரை, 1960களில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டது. அதில், என் தோற்றம் வித்தியாசமாக இருக்கும். வித்தியாசமான படம் என்பதால், நடிக்க சம்மதித்தேன்.
வடிவேலுவை எல்லாருக்கும் பிடிக்கும். அதனால் நடித்தேன்.
சதாவின் கனவு நாயகன் யாரு, எப்படி இருக்க வேண்டும்?
அதுபற்றி, இப்போதைக்கு ஐடியா இல்லை. என் வருங்கால வாழ்க்கை துணை பற்றி பெரிய எதிர்பார்ப்பு இருந்தால், அது நடக்காவிட்டால் ஏமாற்றமாக இருக்குமே; அதனால், அது குறித்து எந்த நினைப்பும் இல்லை.