மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் சங்கத்தின் பொதுக்குழு, கடந்த மாதம் 27ம் தேதி பலத்த சர்ச்சைகளுக்கிடையே நடிகர் சங்க வளாகத்திலேயே நடந்து முடிந்தது. அப்போது ஏற்பட்ட சிறு சிறு கைகலப்புகள், கார் கண்ணாடி உடைப்புகள் விவகாரத்தை இன்னும் சிக்கலாக்கின. அதன் பின் நடிகர் சங்கம் தொடர்பான எந்த ஒரு நிகழ்வும் பெரிய அளவில் நடக்கவில்லை. கொஞ்சம் அமைதியாகவே இருந்து வந்தது.
ஆனால், கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் பொதுக்குழுவுக்கு பின் சில பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று அஞ்சலி செலுத்த நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தனியாகவே வந்தார். நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி ஆகியோருடன் அவர் சேர்ந்து வரவில்லை. இன்று காலை சோவிற்கு அஞ்சலி செலுத்திய போது கூட விஷால் தனியாகவே வந்தார், நடிகர் சங்க நிர்வாகிகள் தனியாக வந்தனர்.
நடிகர் சங்கம் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் முக்கிய நிகழ்வுகளில் பங்கெடுக்கச் சென்றால் கூட்டாகவே செல்வார்கள். தலைவர் நாசர் பேசுவதை விட விஷால் பேசுவதில் அதிக ஆர்வம் காட்டுவார். இதுவரை அப்படித்தான் நடந்து வந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் விஷயங்களைப் பார்க்கும் போது விஷால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரோ என்ற சந்தேகம் இயல்பாகவே வருகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக விளக்கம் தந்து மேலும் சர்ச்சைகள் உருவாவதை தடுப்பது நலம்.