மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சுசீந்திரன் இயக்கத்தில் சுமார் 380 தியேட்டர்களில் இன்று வெளியாகியுள்ள படம் 'மாவீரன் கிட்டு'. விஷ்ணு விஷால் ஹீரோவாகவும், ஸ்ரீதிவ்யா அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ள இந்தப்ப்படம் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இதுவரை அவர் இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக மாவீரன் கிட்டு படத்தைப் பற்றிய டாக் பரவியுள்ளது. அதாவது, தமிழகத்தில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார்!
இந்த படம் உருவாக ஒரு உண்மை சம்பவம்தான் காரணமாம். ''எங்களது 'மாவீரன் கிட்டு' படம் உருவாக காரணமான ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்சில் ஒரு ரசிகர் என்னிடம் உரிமையாக, 'சார், ஒரு தமிழனாய் நாங்க எல்லாம் பெருமைப்படுகிற மாதிரி ஒரு படம் பண்ணுங்க' என்றார். அன்று முதல் பல நேரங்களில் அவர் கூறிய அந்த வார்த்தை என்னை யோசிக்க வைத்தது. 'மாவீரன் கிட்டு' இந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான ஒரு திரைப்படமாக இருக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். நான் ஒரு தமிழனாய் இத்திரைப்படத்தை உருவாக்கியதற்கு பெருமை கொள்கிறேன். இத்திரைப்படம் உருவாக காரணமாக இருந்த அந்த ரசிகருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று சுசீந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குறிப்பிட்டுள்ளார்.
மாவீரன் கிட்டு படத்துக்கு கிடைக்கும் வரவேற்பு, வெற்றியை வைத்தே அடுத்தடுத்து நல்ல படங்களைக் கொடுப்பாராம் சுசீந்திரன்.