விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
மைனா படத்திற்கு பிறகு முன்னணி நடிகரானவர் தம்பி ராமைய்யா. அதுவரை இயக்குனர் என்கிற ட்ராக்கிலும் சென்று கொண்டிருந்தவர், பின்னர் முழுநேர நடிகராகி விட்டார். காமெடி, குணசித்ர வேடங்களில் நடித்து வருபவர், சில படங்களில் கதையின் நாயகன் போன்றும் நடித்து வருகிறார். அந்த வகையில், வருடத்துக்கு 15 படங்களுக்கு மேல் நடித்து வரும் பிசியான நடிகராக இருக்கிறார் தம்பி ராமைய்யா.
இந்நிலையில், தம்பி ராமைய்யாவின் மார்க்கெட் கருதி அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்கும் சில இளவட்ட டைரக்டர்கள், காட்சிகளில் இந்த மாதிரி நடிக்க வேண்டும் என்று தங்கள்தரப்பில் அவரிடம் சொன்னாலும், அவர் அதை பொருட்படுத்துவதில்லையாம். தனது விருப்பத்துக்கே நடிப்பதாக சொல்கிறார்கள். இதனால் தாங்கள் எதிர்பார்த்தபடி அவர் காட்சிகள் வரவில்லை என்று பீல் பண்ணுகிறார்கள்.
ஆனால், இளவட்ட டைரக்டர்களின் படங்களில் ஸ்கிரிப்ட் பேப்பரை பார்த்து விட்டு தனது விருப்பத்துக்கு நடிக்கும் தம்பி ராமைய்யா, பிரபுசாலமன், பார்த்திபன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் என்கிறபோது, அவர்கள் எப்படி நடிக் கச்சொல்கிறார்களோ அப்படித்தான் நடிக்கிறாராம். முன்னணி டைரக்டர்களின் படங்களில் அவர் தனது இஷ்டத்துக்கு நடிப்பதில்லையாம். இதனால் இதுவரை தம்பி ராமைய்யாவை ஆர்வமாக புக் பண்ணிய புதுமுக டைரக்டர்கள் இப்போது அவரது நெருங்க அச்சப்படுகின்றனர்.