விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் ஜி.சிவா மீது தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் (SICA) அபாண்டமாக குற்றம் சாட்டியதாக கூறி நேற்று 24.11.2016 அன்று பெப்சி திடீரென வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். இது திரைப்பட துறையினர் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த குழப்பத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஒளிப்பதிவாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.கண்ணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛இந்த வேலை நிறுத்தத்தின் தொடர்பாக தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் (SICA) தன்னுடைய நிலைப்பாட்டினை விளக்குவது கடைமையாகும். எங்கள் சங்கத்தில் கடந்த நிர்வாகத்தினர் சார்பாக 10.01.2015 அன்று மலேசியாவில் நடந்த SICAவின் விருது வழங்கும் நிகழ்ச்சியின் தொகுப்பை ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப உரிமம் வழங்கப்பட்டது. அதன் மூலமாக பெறப்பட்ட ரூபாய் 3.75 கோடிக்கான (மூன்று கோடியே எழுபந்தைந்து லட்சம்) கணக்குகளில் ரூபாய் நாற்பது லட்சத்திற்கு எந்த ஒரு உண்மையான ரசீதுகளும் ஆவணங்களும் இல்லை.
இது தொடர்பாக கடந்த நிர்வாகத்தினர்கள் திரு. N.K..விஸ்வநாதன் (முன்னாள் தலைவர்),திரு.G.சிவா முன்னாள் பொதுச்செயலாளர்) மற்றும் திரு. K.S.செல்வராஜ் முன்னாள் பொருளாளர்) அவர்களிடம் முறையான விளக்கம் கேட்டு பலமுறை கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்களிடமிருந்து முறையான விளக்கங்களும் சரியான கணக்குகளும் அதற்கு உண்டான ரசீதுகளும், ஆவணங்களும் கொடுக்கப்படவில்லை.
இதன்விளைவாக தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின்(SICA) செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு திரு. G.சிவா உட்பட கடந்த நிர்வாகத்தினர் மீது நிர்வாக ரீதியாகவும், சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில்தான் அவர்களின் மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் தற்போது உள்ள தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் (SICA)புதிய நிர்வாகிகளாகிய நாங்கள் ஓர் புகார் மனுவை அளித்தோம்.
இந்த நடவடிக்கை எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே ஆகும். ஆனால் தற்போது பெப்சி (FEFSI)தலைவராக உள்ள திரு. G.சிவா அவர்கள் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் (SICA) எடுத்த நடவடிக்கையை ஏதோ அவர் மீது மட்டுமே எடுத்த நடவடிக்கை போல ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கி அவரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஒட்டுமொத்த திரைத்துறையின் படபிடிப்புகளை நடத்த விடாமல் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்த இந்த செயல் வருந்ததக்கத்தாகும்.
மேலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடிய செயலாகும். அகில இந்திய தொழிலாளர்கள் சம்மேளன தலைவராகவும் (AIFEC) மற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவராகவும் உள்ள திரு.G.சிவா தலைமையின் கீழ் உள்ள பெப்சி (FEFSI) நிர்வாகமே தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய இதுபோன்ற செயலில் ஈடுபடுவது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாகும். SICA நிர்வாகம் இதுபோன்ற தொழிலாளர்களின் வாழ்வாதரத்திற்கு எதிரான வேலை நிறுத்தத்தை ஒருபோதும் ஆதரிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.