விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
யானை மேல் குதிரை சவாரி படத்தில் நாயகியாக நடித்தவர் அர்ச்சனா சிங். அதையடுத்து கே.ஆர்.மணிமுத்து இயக்கியுள்ள கன்னிசாமி படத்தில் நடித்துள் ளார். இதுதவிர தெலுங்கில் மனஸ் ரெட்டி நாயகனாக நடித்துள்ள பொட்லகிதா என்ற படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படங்களில் வழக்கமான நாயகியாக இல்லாமல் அழுத்தமான கதாபாத்திரங்களில் தான் நடித்து வருவதாக சொல்லும் அர்ச்சனா சிங், இமேஜ் என்கிற வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் மாறுபட்ட வேடங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாகவும் சொல்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், தமிழில் நான் என்ட்ரி கொடுத்து யானை மேல் குதிர சவாரி படத்தில் மாறுபட்ட நாயகியாக நடித்தேன். அதேபோல்தான் இப்போது கன்னிசாமி படத்தில் திருமணமான பெண்ணாக நடிக்கிறேன். ஏற்கனவே கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட நான் அந்த ஐயப்பா சாமி கதையில் அதிக உயிரோட்டமாக நடித்துள்ளேன். அதனால் முதல் படத்தில் ரசிகர்களின் மனதை தொடாத நான் இந்த படத்தில் ரசிக உள்ளங்களில் ஒட்டிக்கொள்வேன்.
மற்றபடி தெலுங்கு படத்தில் ஓரளவு கிளாமர் கலந்த கதாநாயகி வேடத்தின் நடிக்கிறேன். கமர்சியல் கதைகளிலும் என்னால் ஜொலிக்க முடியும் என்பதை உணர்த்தவே அந்த படத்தில் நடிக்கிறேன். தொடர்ந்து, எந்த மாதிரியான கதாபாத்திரங்களுக்கும் அர்ச்சனா சிங் பொருந்தக்கூடிய நடிகை என்று பெயரெடுக் கும் வகையில், மற்ற நடிகைகள் நடிக்க தயங்கும் வேடங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்கிறார் அர்ச்சனாசிங்.