மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இன்றைக்கு நம்பர் ஒன் டைரக்டராக உள்ள மணிரத்னம், ஷங்கர் எல்லாம் மெல்ல மெல்ல வளர்ந்துதான் உச்சத்தை அடைந்தனர். இளம் இயக்குநர்களில் ஒரே ஜம்ப்பில் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் அட்லீ.
ஆர்யாவை வைத்து ராஜாராணி என்ற படத்தை இயக்கிய கையோடு விஜய்யை பிடித்து தெறி' படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அந்தப் படத்தின் வெற்றி அட்லீயை இன்னும் உயரத்தில் உட்கார வைத்துவிட்டது.
தெறி படத்தை தொடர்ந்து தற்போது விஜய்யும், அட்லியும் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள் என்பதும் இந்த படத்தை 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' தயாரிக்க இருக்கிறது என்பதும் பழைய தகவல். இந்த படம் குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பை நேற்று மாலை 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பில் விஜய்யை வைத்து அட்லி இயக்கப் போகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
'பாகுபலி' உட்பட பல பெரும் வெற்றிப் படங்களின் கதை ஆசிரியரும், இயக்குனர் ராஜமௌலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் அட்லீக்கு பல கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். அந்த சம்பளத்தை கேட்டவர்கள் வாயடைத்து போய் நிற்கிறார்களாம்.