மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இரண்டு கனவுகள் இருந்தது. அது கல்கியின் பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து அதில் பொன்னியின் செல்வனாக நடிப்பது. இன்னொன்று இயேசு கிறிஸ்துவாக நடிப்பது. பொன்னியின் செல்வன் முதல் கட்ட பேச்சு வார்த்தையிலேயே நின்று விட்டது. இயேசு நாதர் கனவு பூஜை வரை வந்து நின்று விட்டது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு பேட்டியில் தனக்கு இயேசு நாதராக நடிக்க அதிக விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இதை படித்த அன்றைய மலையாள இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஜோசப் தளியத், தன்னிடமிருந்த இயேசு நாதர் ஸ்கிரிப்ட்டை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து படியுங்கள் பிடித்திருந்தால் நானே தயாரித்து, இயக்குகிறேன். மலையாளம், தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தயாரிக்கலாம் என்றார். கதையை படித்து பார்த்த எம்.ஜி.ஆர்., பிரமாதமாக இருக்கிறது. நான் ரெடி என்று கூறியிருந்தார். இயேசு நாதர் படத்திற்காக ஒரு வருடம் கால்ஷீட் தரவும் தயாராக இருந்தார்.
படத்துக்கு அன்றைய பிரமாண்ட ஒளிப்பவதிவாளர் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இயேசுவாக எம்.ஜி.ஆர் நடிக்க முற்றிலும் தென்னிந்திய கலைஞர்களை கொண்டு ஹாலிவுட் தரத்தில் படத்தை தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
1969ம் ஆண்டு டிசம்பர் 26ந் தேதி நடந்த படத்தின் பூஜைக்கு அன்றைய கத்தோலிக்க ஆர்ச் பிஷப் அருளப்பர் உள்ளிட்ட கிறிஸ்தவ பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் வந்திருந்தார்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இயேசு வேடத்தில் அங்கு வந்ததை பார்த்தவர்கள், நிஜமாகவே அந்த இயேசு பிரான் வருவதைப்போலவே உணர்ந்தார்கள். உலத்திலேயே இயேசு வேடம், எம்.ஜி.ஆரைப்போல வேறு யாருக்கும் பொருந்தாது என்றே பேசினார்கள். யார் கண் பட்டதோ தெரியவில்லை அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது. அவர் சார்ந்திருந்த பகுத்தறிவு கட்சி அவர் இயேசுவாக நடிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்தப் மட்டும் வந்திருந்தால் 40 ஆண்டுக்கு முன்பே தமிழ் சினிமா உலகத் தரத்திற்கு சென்றிருக்க கூடும்.