ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? |
திரைப்பட நடிகர்கள் கலந்து கொண்டு விளையாடும் செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டி எனப்படும் சிசிஎல் போட்டிகள் நடந்து வருகிறது. அதேப்போன்று வருகிறது பேமஸ் பிரிமியர் லீக் போட்டி. சிசிஎல் போட்டியில் நடிகர்கள் மட்டுமே விளையாடுவார்கள். இதில் நடிகர்கள் மட்டுமல்ல இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், இயக்குனர்கள், நடன இயக்குனர்கள், சண்டை இயக்குனர்கள் என அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டு விளையாடுவார்கள்.
இந்த போட்டிகள் இந்த மாதம் 27ந் தேதி தொடங்கி டிசம்பர் 24ந் தேதி வரை நடக்கிறது. தென்னிந்திய அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது. தமிழ் தலைவாஸ், தெலுங்கு தண்டர்ஸ், கன்னடா கிங்ஸ, மலையாளி ஹீரோஸ் என அணிகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியை எப்.பி.எல் மீடியா என்ற நிறுவனம் நடத்தவுள்ளது. இந்த வருடம் தென்னிந்தியாவில் உள்ள நான்கு அணிகளும், அடுத்த வருடம் வட இந்தியாவில் உள்ள நடிகர்கள் மற்றும் கலைஞர்களையும் இணைத்து போட்டிகள் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும் மேட்மிண்டன், கைப்பந்து, பெண்கள் சம்பந்தமான விளையாட்டுகளை தொடங்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சர்வதேச தரத்திற்கு இணையாக திறமையான பயிற்சியாளர்களை கொண்டு திரை நட்சத்திரங்கள் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர். தமிழ் தலைவாஸ் அணியில், விவேக், சாக்ஷி சிவா, இசையமைப்பாளர் தமன், எஸ்.பி.பி.சரண், விஜய் ஆனந்த், தேவ் ஆனந்த், ஈஸ்வர், ராஜ்குமார், ஜெயந்த், விக்கி,சதீஷ், ஸ்ரீதர், சேத்தன், பாலாஜி ஆகியோர் விளையாடுகிறார்கள். அணியின் மேனேஜர் பானுபிரகாஷ்.