மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகை த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவரும் ஒன்றாக தனி விமானம் பிடித்து ஜாலியாக சுற்றி வந்தார்கள். நிச்சயதார்த்ததும் ஒரு திருமணத்துக்கு நிகராக பிரமாண்டமாக நடந்தது. நிச்சயதார்த்தம் நடந்த சில நாட்களிலேயே நிச்சயதார்த்தம் முறிந்து விட்டதாகவும் நவ் ஐ ஏம் சிங்கிள் என்றும் த்ரிஷா அறிவித்தார்.
நிச்சயதார்த்த முறிவுக்கு த்ரிஷா இதுவரை காரணம் சொன்னதில்லை. மீடியாக்கள் தங்களுக்கு தெரிந்த காரணத்தை சொல்லிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் த்ரிஷா திருமண முறிவுக்கான புது விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
த்ரிஷா தனுசுடன் ஜோடியாக நடித்துள்ள கொடி படம் சமீபத்தில் வெளிவந்தது. இதில் அவர் வில்லியாக நடித்துள்ளார். இந்தப் படம் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படுகிறது. இதன் புரமோசனுக்காக தனுசும், த்ரிஷாவும் ஐதராபாத் சென்றுள்ளனர். அங்கு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் த்ரிஷாவின் திருமண முறிவு பற்றி கேட்டபோது அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
எனக்கு தெரிந்தது சினிமாதான். எனக்கு எல்லாமே சினிமாதான். கடைசி மூச்சு உள்ளவரை நடித்துக் கொண்டே இருக்க ஆசை. ஹீரோயினாக இல்லாவிட்டாலும் குணசித்ர கேரக்டரிலாவது நடித்துக் கொண்டே இருப்பேன். திருமணம் செய்து கொள்ள விரும்பியது உண்மை. அது நிச்சயதார்த்தம் வரை சென்றது உண்மை. ஆனால் திருமணத்துக்கு பிறகு நடிக்க முடியுமா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தது. திருமண வாழ்க்கையை விட எனக்கு சினிமா முக்கியம். அதனால் திருமணத்தை ரத்து செய்து விட்டேன். என்னால் சினிமாவை விட்டு விட்டு வாழ முடியாது. என்கிறார் த்ரிஷா.