விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிகுமாரிடம் உதவி இயக்குனராக இருந்த ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் படம் மரகத நாணயம். ஆதி, நிக்கி கல்ராணி, ஹீரோ, ஹீரோயின். இவர்கள் தவிர முண்டாசுபட்டி ராம்தாஸ், அருண்ராஜா காமராஜ், டேனியல், ஆனந்தராஜ், கோட்டா சீனிவாசராவ், பரமானந்தம் ஆகியோரும் நடிக்கிறார்கள். சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் நாராயணன் உதவியாளர் திபு நைனன் தாமஸ் இசை அமைக்கிறார்.
"இன்று நேற்று நாளை போன்றே இதுவும் பேண்டசி கதை. அதில் டைம் மிஷின் மேட்டர், இதில் மரகத நாணயம் மேட்டர். மன்னர் காலத்தை சேர்ந்த ஒரு முக்கிய பொருள் மரகத நாணயம். பல கோடி மதிப்புள்ள அந்த நாணயத்தை பற்றி ஒரு குறிப்பு கிடைக்கிறது. அதை வைத்துக் கொண்டு இரண்டு குரூப்கள் அதனை தேடிச் செல்கிறது. ஆதி தலைமையில் ஒரு குரூம், வில்லன் கோட்டா சீனிவாசராவ் தலைமையில் ஒரு குரூப்.
மரகத நாணயம் பற்றி மன்னர் கால காட்சிகள் இருக்கிறது. இதற்காக ஆர்ட் டைரக்டர் ராகுல் பிரமாண்ட அரண்மணை செட் போட்டுக் கொடுத்தார். படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும். சீரியசான கதை போல தெரிந்தாலும் காமெடிக்கு முக்கியத்தும் கொடுத்து உருவாக்கி உள்ளோம்" என்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன்.