விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமான கெளதம் கார்த்தி, முத்துராமலிங்கம் படத்தை அடுத்து ஜெயங்கொண்டான் ஆர்.கண்ணன் இயக்கும் இவன் தந்திரன் என்ற படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை ஆர். கண்ணனே தயாரித்து இயக்குகிறார். வித்தியாசமான காதல் கதையில் உருவாகும் அந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடிக்கிறார். ஆனால், இந்த படத்தில் ஆர்.கண்ணன் இதற்கு முன்பு விமலை வைத்து இயக்கிய ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் நடித்த பிரியாஆனந்தைதான் நாயகியாக நடிக்க இருந்தாராம். ஆனால் கெளதம் கார்த்திக் அதை தடுத்து விட்டாராம்.
காரணம், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை படத்தில் பிரியாஆனந்துடன் இணைந்து நடித்தபோதே கிசுகிசுவில் சிக்கினார் கெளதம். அதை யடுத்து முத்துராமலிங்கம் படத்தில் நடித்து வந்தபோதும் கிசுகிசுக்கள் மீண்டும் பரவி வந்தன. அதனால் தொடர்ந்து பிரியாஆனந்துடன் நடிப்பது கிசுகிசுக்க ளுக்கு உரம் போட்ட கதையாகி விடும் என்பதால், இந்த படத்திற்கு வேறு நடி கையை புக் பண்ணுங்கள் என்று கெளதம் கார்த்திக்தரப்பில் கூறப்பட்டதாம்.அதையடுத்துதான் இவன் தந்திரன் படத்திற்கு ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தம் செய்யப்பட்டாராம்.