‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று இன்னும் எத்தனை முறைதான் சொல்றது என்று நடிகை ஜெனிலியா கேள்வி எழுப்பியுள்ளார். நடிகை ஜெனிலியாவுக்கும், அவரது காதலர், இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் திருமணம் நடந்துவிட்டது என்று அவ்வப்போது செய்திகள் வருவதும் அதை ஜெனிலியா மறுப்பதும் தொடர் கதையாகிவிட்டது. இப்போது அவர் கொஞ்சம் கடுப்பாகி, தேஷ்முக்கு தனக்கு நல்ல நண்பர் மட்டும்தான் நட்பைத் தாண்டி எதுவும் இல்லை, என்று கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக ஜெனிலியா அளித்துள்ள பேட்டியில், எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அனைவரிடமும் சொல்லிவிட்டுத் தான் திருமணம் செய்வேன். கடந்த 5 வருடங்களாக எனது திருமணத்தைப் பற்றியே பேசுகிறார்கள். என் தனிப்பட்ட வாழக்கையில் அப்படி என்ன தான் அக்கறையோ. நானும் எனக்கு திருமணம் ஆகவில்லை என்று பலமுறை சொல்லிவிட்டேன். இதற்கு மேல் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தயவு செய்து இனிமேல் எனக்கு ரகசியமாக திருமணமாகிவிட்டது என்று பேசாதீர்கள். இதனால் என் குடும்பத்திலும், ரித்தேஷ் குடும்பத்திலும் சலசலப்பு ஏற்படுகின்றது. நானும் ரித்தேஷும் நல்ல நண்பர்கள் அவ்வளவு தான். நட்பைத் தாண்டி எங்களுக்குள் வேறொன்றுமில்லை, என்று கூறியுள்ளார்.