விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்தவர் நதியா. பிற நடிகைகள் போல நதியாவும் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவியின் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ரீ-என்ட்ரியானார். அவ்வப்போது தனக்கு பிடித்த படங்களில் நடித்து வரும் நதியா, தற்போது ‛‛திரைக்கு வராத கதை'' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். நதியாவுடன் இனியா, ஈடன், கோவை சரளா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். மலையாள பிரபல இயக்குநர் துளசிதாஸ் இயக்கியுள்ளார்.
தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்துள்ளனர். இப்படத்தை எம்ஜேடி தயாரிப்பு நிறுவனம் சார்பில் மணிகண்டன் தயாரித்திருக்கிறார். இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கார்த்தியின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‛காஷ்மோரா' மற்றும் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ள கொடி படங்கள் ரிலீஸாகிறது.