மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது, இதில் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டுவது. புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் இதுபற்றிய விபரத்தையோ, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றியோ எதுவும் வெளியிடப்படவில்லை. செயற்குழு முடிந்த பின்னர் துணை தலைவர் பொன்வண்ணன் கூறிதாவது:
செயற்குழு கூட்டத்தில் தமிழக முதலவர் அம்மா அவர்கள் சீக்கிரம் உடல் நலம் பெற்று மீண்டும் தமிழகத்தினுடைய மக்கள் பணியில் வந்து பணியாற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டோம். பின்னர் எங்களுடைய கடந்த கால செயல்கள் அனைத்தையும் திரும்பி பார்த்தோம். நிர்வாகத்தில் உள்ள மூத்த நிர்வாகிகள் அனைவரிடமும் அவர்களுடைய கருத்தை கேட்டு கொண்டு அதன்படி எந்த விஷயத்தை உடனே முடிக்க வேண்டும், எந்த விஷயத்தை கால தாமதமாக செய்யலாம் என ஆலோசனை செய்தோம். நடிகர் சங்கம் 100 விழுக்காடு நேர்மையாக செயல்படுகிறது என்பதை முழுமையாக இக்கணம் ஆணித்தனமாக இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம். என்றார் பொன்வண்ணன்.