மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மைனாவிற்கு பிறகு பிரபுசாலமன் இயக்கிய படம கும்கி. விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமான இந்த படத்தில் லட்சுமிமேனன், தம்பி ராமைய்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர். டி.இமான் இசையமைத்திருந்தார். யானை சம்பந்தமான கதையை மையப்படுத்தி உருவான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் பிரபுசாலமன். இந்த பாகத்திலும் விக்ரம்பிரபுதான் நாயகனாக நடிக்கிறார்.
மேலும், முதல் பாகத்தின் க்ளைமாக்சில் கொம்பன் யானையை கும்கி யானை கொன்று விடும். பின்னர் அந்த கும்கி யானையும் இறந்து விடும். ஆனால், இந்த கும்கி-2வில், அந்த கும்கி யானை உயிரோடு இருந்த நேரத்தில் ஒரு பெண் யானையுடன் இணைந்தபோது அதற்கு பிறந்திருந்த குட்டி யானை ஒன்று பெரிதாக வளர்ந்திருக்குமாம். அந்த யானைகள் ஒன்று சேர்ந்த ப்ளாஷ்பேக் காட்சி இப்போது இடம்பெறப்போகிறதாம். அதையடுத்து அந்த பெண் யானை பெற்றெடுத்த குட்டியானை பெரிதாக வளர்ந்த பிறகு விக்ரம் பிரபுவை தேடி வருமாம். அதை அவர் பாசத்தோடு வளர்ப்பது போன்று கும்கி-2 படம் உருவாகயிருக்கிறதாம்.