விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
எல்.வி.பிரசாத் பிலிம் அகாடமியில் படித்த நிஷாந்த் ரவீந்திரன், மற்றும் ஷங்கர் ராஜ் இணைந்து தயாரிக்கும் படம் ஓடு ராஜா ஓடு. இதில் நிஷாந்த் ரவீந்திரன் இயக்கத்தையும், திரைக்கதையையும் கவனித்துக் கொள்கிறார். ஜதின் ஷங்கர் ராஜ் ஒளிப்பதிவையும், இயக்கத்தையும் கவனித்துக் கொள்கிறார். சாருஹாசன், நாசர், குரு சோசுந்தரம், ஆனந்த்சாமி, லட்சுமி பிரியா, ஆஷிகா சல்வான், ரவீந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், மெல்வின் உள்பட பலர் நடித்துள்ளனர். மூலன் குரூப் சார்பில் மூலன் தயாரிக்கிறார்.
"இது ஒரே நாளில் நடக்கும் கதை. நான்கு கேரக்டர்கள். ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு இலக்கு. அதனை அடைய அவர்கள் எடுக்கும் முயற்சி, அதில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள். நான்கு பேரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது என்ன நடக்கிறது என்பதை சீரியசாகவும், அதே நேரத்தில் சிரிப்பாகவும் சொல்கிறோம். மனித வாழ்வின் அத்தனை விதமான நிகழ்வு மற்றும் நெகிழ்வுகளை கடந்து செல்கிற படமாக இருக்கும். எல்லோரும் ஓடிக் கொண்டே இருக்கிறோம். எதை நோக்கி ஓடுகிறோம் என்பது தெரியாமலேயே ஓடிக் கொண்டிருக்கிறோம். அதைப் பற்றிய படம்" என்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள்.