வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
மங்காத்தா படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் டைரக்டர் வெங்கட் பிரபு, அடுத்தும் அஜித்தை வைத்து ஒரு படம் பண்ணப்போகிறார். கூடவே இந்த படத்தில் அஜித்துடன் சிம்புவும் நடிக்க போகிறாராம். தொடர்ந்து தோல்வி படங்களாக இருந்த வந்த அஜித்திற்கு, தனது 50வது படமான மங்காத்தா அவருக்கு ஒரு பெரிய மாஸ் ஹிட் என்றே சொல்லலாம். அஜித்தின் இந்த வெற்றியால் அவரது மார்க்கெட் பழையபடி உயரத்தொடங்கியுள்ளது. மேலும் பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அஜித்தை வைத்து இயக்க போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அஜித்தின் இப்போதைய சாய்ஸ் விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு, விஜய் ஆகிய மூவரும் தான்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும், இந்தபடத்தை வெங்கட்பிரபுவே இயக்கபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அதுஎன்னவென்றால், தான் ஒரு அஜித் ரசிகன் என்று வெளிப்படையாகவே கூறிவரும் சிம்புவும், இந்தபடத்தில் அஜித்துடன் சேர்ந்து நடிக்க இருக்கிறாராம். மும்பை கார்ப்பொரேட் நிறுவனத்துடன் இணைந்து ஏ.எம்.ரத்னம் இந்தபடத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளாராம். விரைவில் இதுபற்றிய உறுதியான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது