விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கௌதம் மேனன் தமிழ் சேனல்களுக்கு அவ்வளவாக இண்டர்வியூ கொடுப்பதில்லை என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால் சமீபத்தில் வந்துசென்ற ஓணம் பண்டிகையின்போது மலையாள சேனல் ஒன்றிற்கு ஸ்பெஷல் பேட்டி கொடுத்திருக்கிறார்.. அதைவிட சுவாரஸ்யம் அவரை பேட்டி எடுத்தது, அவர் இயக்கிவரும் 'அச்சம் என்பது மடமையடா' ஹீரோயினான மஞ்சிமா மோகன் தான். பேட்டி மலையாள சேனலில் தான் என்றாலும் கௌதம் மேனன் பேசியதென்னவோ முக்கால்வாசி நேரம் ஆங்கிலத்தில் தான்.
அப்போது கௌதம் மேனனிடம் சிம்பு, தனுஷ் இருவரையும் வைத்து படம் இயக்கி வருகிறீர்களே உங்களது அனுபவத்தில் இருவரைப்பற்றிய மதிப்பீடு என்ன மஞ்சிமா கேட்டார்.. அதற்கு பதில் சொன்ன கௌதம் மேனன், “இரண்டு பேருமே 'ரா'வானவர்கள்.. அவர்களை நமக்கு ஏற்றபடி எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.. சினிமாவை நன்றாக கற்று வைத்திருப்பவர்கள்.. இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால் தனுஷ் சொன்ன நேரத்திற்கு வருவார்.. சிம்பு சொன்ன நேரத்திற்கு வரமாட்டார்.. அவ்வளவுதான்” என போகிற போக்கில் சிம்பு மீதான அதனது கோபத்தை வெளிக்காட்டி விட்டார்.