'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
காவிரி நீர் பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்படவும், முதல்வர் ஜெயலலிதா நலம் பெறவும் வேண்டி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், நடிகர் ரஜினியின் சகோதரர், 1,008 கலச பூஜை செய்து வழிபட்டார்.
நடிகர் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணன் இவர் நேற்று, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு தன் உறவினர்களுடன், வந்தார். சுவாமி சன்னிதி முன், 1,008 சங்காபிஷேக பூஜை செய்து வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சத்திய நாராயணன் கூறுகையில், முதல்வர் ஜெ., உடல் நலம் பெற்று நீடூழி வாழவும், காவிரி பிரச்னையில் சுமுக தீர்வு ஏற்பட்டு, மக்கள் அமைதியுடன் வாழவும் வேண்டி, கோவிலில், 1,008 கலச பூஜை செய்து வழிபட்டோம், என்றவர், ரஜினி ஒருபோதும் அரசியலுக்கு வர மாட்டார். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் அதில் உடன்பாடு கிடையாது. தற்போது எந்திரன்-2 படம் வேகமாக உருவாகி வருகிறது என்றார்.