மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களின் அமோக பாராட்டுகளையும் பெற்றவர் நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால். இதுவரை எவரும் கண்டிராத கதை களத்தை முண்டாசுப்பட்டி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வழங்கிய பெருமை இயக்குனர் ராமிற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் அதிகளவில் பெற்ற இந்த இருவர் வெற்றி கூட்டணி, தற்போது ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் டில்லி பாபு தயாரிக்கும் பெயரிடப்படாத அதிரடி படத்திற்காக இணைந்திருக்கிறது.
"எப்போதுமே எனக்கும், விஷ்ணு விஷாலுக்கும் இடையே நல்லதொரு நட்புறவு நீடித்து வருகிறது. தன்னுடைய நூறு சதவீத ஒத்துழைப்பையும் இயக்குனருக்காக வழங்கும் ஒரு நடிகர் விஷ்ணு விஷால்.... அவருடன் இந்த படத்திற்காக மீண்டும் ஒரு முறை இணைந்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. பொதுவாகவே ஒவ்வொரு நடிகரின் திரையுலக வாழ்க்கையிலும், ஏதாவது ஒரு திரைப்படம் அவர்களுக்கு திருப்பு முனையாக அமையும். அந்த வகையில் இந்த அதிரடி திரைப்படமானது விஷ்ணு விஷாலின் திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பு முனையாக இருக்கும்..." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் ராம்.
"ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுப்பவர் விஷ்ணு விஷால் தொடர்ந்து நான்கு வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் அவருக்கு இந்த கதாபாத்திரம் கன கச்சிதமாக பொருந்தும். அவருடைய முண்டாசுப்பட்டி படத்தில் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட கதை களத்தில் உருவாகி வரும் இந்த அதிரடி திரைப்படமானது நிச்சயமாக விஷ்ணு விஷாலை வேறொரு பரிமாணத்தில் பிரதிபலிக்கும்... என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பாளர் டில்லி பாபு.