விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
அழகர்சாமியின் குதிரை, மன்னாரு படங்களைத் தொடர்ந்து அப்புக்குட்டி நாயகனாக நடித்துள்ள காகித கப்பல் படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. கேரளாவில் ஒரு படப்பிடிப்பில் இருந்த அப்புக்குட்டி அவசரப்பயணமாக சென்னை வந்து அந்த விழாவில் கலந்து கொண்டார்.
இந்த காகித கப்பல் படத்தில் ஒரு அழுத்தமான கதாநாயகனாக நடித் துள் ளேன். அழகர்சாமியின் குதிரையில் குதிரைக்காரனாக, மன்னாரு படத்தில் காதல் கதையில் நடித்த நான், இந்த படத்தில் கிராமத்தில் இருந்து சென்னை வந்து போராடி வெற்றிபெறும் ஒருவன், திருமணத்திற்கு பிறகு பிரச்சினை களை சந்திக்கும் கதையில் நடித்துள்ளேன். அந்த வகையில், இந்த படத்தில் நடிப்பில் என்னை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தியுள்ளேன் என்கிறார்.
அதோடு, சமீபகாலமாக என்னைப்பற்றி தாறுமாறான செய்திகள் நிறைய வருகிறது. அஜீத் சார் எனக்கு வீடு வாங்கித்தந்ததாக எழுதுகிறார்கள். அதோடு, நான் சம்பளம் வாங்காமலேயே நடிப்பதாகவும் எழுதுகிறார்கள். சம்பளம் வாங்காமல் எப்படி நடிப்பேன். இப்படி எழுதினால், சம்பளம் இல்லாமல் நடிப்பீர்களாமே என்று ஆளாலுக்கு வந்து நிற்பார்கள். பணம், புகழ் இதுக்காகத்தானே சினிமாவில் நடிக்கிறோம். பணம் வாங்காமல் யாராவது நடிப்பார்களா? என்று பீல் பண்ணும் அப்புக்குட்டி, எந்த படமாக இருந்தாலும் எனக்கான சம்பளத்தை வாங்கிக்கொண்டுதான் நடிக்கிறேன். அதேபோல் நான் சினிமாவில் நடித்து சம்பாதித்துதான் சென்னையில் வீடு கட்டி வருகிறேன் என்கிறார்.