மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இந்தியா சார்பில் சிறந்த வெளிநாட்டு படத்திற்காக தமிழில் வெற்றிமாறன் இயக்கிய ‛விசாரணை' படம் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது வெற்றிமாறனை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிமாறன்... ‛‛ஆஸ்கர் விருதுக்கு விசாரணை படத்தை தேர்வு செய்த தேர்வுக்குழுவுக்கு நன்றி. கதாசிரியர் சந்திரகுமாருக்கு நன்றி, படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. கதை மற்றும் திரைக்கதை மீது அதிகம் நம்பிக்கை இருந்தது. இதன்மூலம் எனக்கான பொறுப்பு அதிகரித்துள்ளது. அடுத்தகட்ட முயற்சிக்கு விசாரணை படம் ஊக்கம் அளித்துள்ளது. நான் திட்டமிட்டு எதையும் செய்வது கிடையாது, அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்ற மாதிரி தான் கதைக்களம் அமைகிறது'' என்றார்.