மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! |
சேதுபதி படத்தின் வெற்றிக்கு பின், சோட்டாணிக்கரை சேச்சி ரம்யா நம்பீசன் மீது, கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 'குடும்ப பாங்கான இல்லத்தரசி வேடங்களில் இனி ரம்யா, கொடி கட்டி பறப்பார்' என பேசப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தற்போது இவரது கைவசம் ஒரு மலையாள படமும், ஒரு தமிழ் படமும் மட்டுமே உள்ளன. 30 வயதை தொட்டு விட்டதால், சிக்கிரமே அவருக்கு திருமணம் செய்து வைக்க, அவரது குடும்பத்தினர் ஆசைப்படுகின்றனர். ரம்யாவே, இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், தன் நெருங்கிய தோழியும், மலையாள, 'டிவி' தொகுப்பாளினியுமான ஷில்பா பாலாஜியின் கல்யாணத்தில், 'யாரோ, யாரோடி உன்னோட புருஷன்' என்ற பாடலுக்கு, சக நடிகையான பாவனாவுடன் சேர்ந்து, கலக்கலான குத்தாட்டம் போட்டு, சந்தோஷத்தில் மிதக்கிறாராம்.