பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் |
கார்பந்தைய வீரர் ஒருவர் குடிபோதையில் காரை ஓட்டி, ஆட்டோக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இதில் பலியான ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகத்தின் மகளின் கல்வி செலவை நடிகர் விஷால் ஏற்றுள்ளார்.
இருதினங்களுக்கு முன்னர் சென்னையில் அதிகாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதியதில் 13-ஆட்டோக்கள் சேதம் அடைந்தது, அதில் ஆட்டோக்களில் ஒய்வு எடுத்துக்கொண்டு இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் நாலாபுறமும் தூக்கிவீசப்பட்டனர். அதிகாலையில் நடந்த இச்சம்பவத்தில் 9-ஆட்டோ ஓட்டுனர்கள் படுகாயம் அடைந்தனர், அவர்களில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுக்கா, அக்குர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் வயது-29 பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக காரை ஓட்டி சென்ற கார் பந்தய வீரர் விகாஷ் மற்றும் அவரது நண்பர் சரண் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்
இந்நிலையில் இச்செய்தியை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாலரும், நடிகருமான விஷால் ஆறுமுகத்தின் குடும்பத்தை தொடர்புக்கொண்டு பேசினார். அப்போது ஆறுமுகத்திற்கு மனிஷா(வயது-7) என்ற மகள் இருப்பதை அறிந்து உடனே மனிஷாவின் கல்வி செலவை தனது தேவி அறக்கட்டளை பொறுப்பேற்று கொள்வதாக கூறி சமாதானம் தெரிவித்தார்.
விஷாலின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.