ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா' காமெடி ஷோ மூலம் சந்தானத்தை சின்னத்திரையில் பிரபலமடைய வைத்தவர் ராம் பாலா.இன்று ஹீரோ அந்தஸ்த்துக்கு உயர்ந்துவிட்ட சந்தானம் காமெடியனாக தனது திரையுலக வாழ்க்கையைத் துவங்கினார். அவருக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த ராம் பாலா உடன் மனஸ்தாபம் ஏற்பட்டு சில வருடங்களாக அவருடன் பேசாமல் இருந்தார் சந்தானம்.
இதற்கிடையில் சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் தொடர்ந்து ப்ளாப் ஆனதால் ராம்பாலாவுடன் சமாதானமாகி அவரை பெரிய திரைக்கு கொண்டுவந்தார் சந்தானம். இவர்களின் கூட்டணியில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு' படம் துட்டு மேல் துட்டு லாபம் கொடுத்தது. எனவே அடுத்தப் படத்தையும் சந்தானத்தை ஹீரோவாக வைத்து இயக்க திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில் ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து ஒரு படத்தை இயக்கும் தேடி வர, அந்தப் படத்தை இயக்க இருக்கிறார் ராம்பாலா.
பெயரிடப்படாத இந்தப்படத்தை, 'ஸ்டீவ்ஸ் கார்னர்' நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார் ஸ்டீபன். ராம் பாலாவின் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதம் ஆரம்பிக்க உள்ளனர்.