விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும், நம்பர் ஒன் நடிகையாகவும் வலம் வருபவர் நயன்தாரா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‛இருமுகன்' படத்திற்கு ஓரளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. நயன்தாராவுக்கு ஏற்கனவே சில காதல்கள் கசந்து போன நிலையில் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டுள்ளார். இதை இருவரும் ஒப்புக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. சமீபகாலமாக இருவரும் எங்கு போனாலும் ஒன்றாகவே வலம் வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா, இன்று ஒணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார். அதுவும் தனது காதலரான விக்னேஷ் சிவன் உடன் கொண்டாடியிருக்கிறார். கேரள பாரம்பரிய புடவையை நயன்தாரா அணிந்தபடி, விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக செல்பி எடுத்து மகிழ்ந்து அதை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கூடவே அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டிருக்கிறார்.