ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
சினிமாவுக்கு ஜாதி, மதம், மொழி, வேறுபாடு கிடையாது என்று பீரங்கிபுரம் சினிமா விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு. கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் தமிழில் நடிக்கும் படம் ‛பீரங்கிபுரம்'. தமிழ்,தெலுங்கு,கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல்பார்வை வெளியீட்டு விழா சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. பர்ஸ்ட்லுக்கை நடிகர் ஸ்ரீகாந்தும், நடிகை நமீதாவும் வெளியிட்டனர்.
பின்னர் பேசிய ஸ்ரீகாந்த்... ‛‛கன்னட மொழியிலிருந்து தேசியவிருது பெற்ற நடிகர் இங்கே தமிழில் நடிக்கிறார். அவரை வரவேற்கிறோம். அவர் மொழி தெரியாது பேசினார். சினிமாவுக்கு ஜாதி, மதம், மொழி, வேறுபாடு எல்லாம் கிடையாது. இது கர்நாடகத்துக்கும் பொருந்தும், தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கே இவ்வளவு உழைத்திருக்கிறார்கள். சினிமாவில் படப்பிடிப்புக்குப் போய் யோசிப்பவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் ஒரு படம் தொடங்கும் முன்பாகவே ஆறுமாதம் ஒரு வருடம் என்று முன் தயாரிப்பு வேலைகள் செய்திருக்கிறார்கள். நன்றாக ஆயத்தம் செய்கிறார்கள். இப்படி எல்லாரும் செய்தால் காலவிரயம் பண விரயம் ஆகாது. இவர்கள் பாராட்டுக்குரியவர்கள். என்றார்.