நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் எதை நோக்கி. 320டிகிரி என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. நிதின் சாம்சன், டாமி என்ற புதுமுகங்களுடன் லிவிங்ஸ்டன், சுவாமிநாதன், காயத்ரி, லாவண்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜி.ஜதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். என்.சி.அனில் இசை அமைக்கிறார். ஹீரோ நிதின் சாம்சன் தான் படத்தை இயக்குகிறார்.
"காட்டுக்குள் விலங்குகளை புகைப்படம் எடுக்கச் செல்லும் ஒரு போட்டோகிராபரும், சுற்றுலா வந்து வழிதவறிய ஒரு பெண்ணும் சந்தித்துக் கொள்கிறார்கள். காட்டிலிருந்து தப்பிக்க போராடும் அவர்களுக்குள் காதல் மலர்கிறது. அதே அடர்ந்த காட்டுக்குள் இன்னும் சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் கொடூரமானவர்கள். இவர்களுக்குள் நடக்கும் விஷயங்கள்தான் கதை. முதுமலை, மசனக்குடி, கூடலூர் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் படமாக்கி உள்ளோம்" என்கிறார் இயக்குனர் நிதின் சாம்சன்.