ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! |
'ஜிகர்தண்டா' படத்தில் இணைந்து நடித்த சித்தார்த்தும் பாபி சிம்ஹாவும் மீண்டும் இணைந்து இன்னொரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.. ஆனால் இங்கல்ல.. மலையாளத்தில்.. ஆம்.. ரத்தீஷ் அம்பாட் இயக்கத்தில் திலீப் நடித்துவரும் 'கம்மார சம்பவம்' படத்தில் தான் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.. சித்தார்த் இந்தப்பத்தில் நடிப்பது கடந்த மாதமே உறுதியாகவிட்ட நிலையில், இப்போது பாபி சிம்ஹாவும் இந்தப்படத்தில் இணைந்து நடிப்பதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.
சித்தார்த்திற்கு மலையாளத்தில் இதுதான் முதல் படம் என்றாலும், பாபி சிம்ஹா மலையாளத்தில் ஏற்கனவே ஒன்றிரண்டு படங்களில் நடித்தவர் தான். நேரம் படத்தில் மலையாளத்திலும் 'வட்டி ராஜாவாக நடித்த பாபி சிம்ஹா, அதன்பின்னர் பிவேர் ஆப் டாக்ஸ்' என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அடுத்ததாக ஒரு வடக்கன் செல்பி' படத்தில் சில வினாடிகளே வந்து செல்லும் கேரக்டரில் நட்புக்காக நடித்துக்கொடுத்தார். தமிழில் பிசியாகிவிட்டாலும் மலையாளத்தில் நல்ல கேரக்டரை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பாபிசிம்ஹாவுக்கு இந்தப்படமும் கேரக்டரும், கூடவே திலீப்புடன் இணைந்து நடிப்பதும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாம்.