மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கபாலி திரைப்படத்தில் ரஜினி சென்னைக்கு வரும் காட்சியில் 'நம்பி வந்தவங்கள கைவிட மாட்டோம்....மெட்ராஸ் காரங்க சார்' என்று தியேட்டரில் அப்ளாஸ் வாங்கிய ஜே கேரக்டரை வைத்து பல மீம்ஸ்கள் வைரலாகியது. தியேட்டரில் மட்டுமல்ல சினிமா வட்டாரத்திலும் பராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன அவருக்கு. படம் வெளியானதில் இருந்து பரிசு மற்றும் பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் ஜே கேரக்டரில் நடித்த விஷ்வந்த்.
இவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி. அங்குள்ள செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியில் படித்தபோது கல்ச்சுரல் நிகழ்ச்சியில் நடனம், நடிப்பு என்று அசத்தி கல்லூரிக்குப் பல பரிசுகளைப் பெற்று தந்திருக்கிறார். ரஜினியின் பாபா திரைப்படம் வெளியான வெள்ளிவிழா நிகழ்ச்சி 'ரஜினி - 25' பல மாவட்டங்களில் நடந்தது. அதில் கலந்துகொண்டு 'சூப்பர் ஸ்டார் ரஜினி', 'பெஸ்ட் பெர்ஃபார்மர்' விருது லதா ரஜினிகாந்திடம் பெற்றதுடன் சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்திருக்கிறது. அதனுடன் லதா ரஜினிகாந்தின் அன்பையும் பெற்றிருக்கிறார்.
படித்து முடித்ததும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு கிளம்பியவர், ஸ்ரீதர் மாஸ்டரிடம் நடன உதவி இயக்குனராக சேர்ந்தார். அதுமட்டுமின்றி, நவீன கூத்துப்பட்டரை ஜெயராவிடம் நடிப்பு பயிற்சி பெற்றார். பாண்டியன் மாஸ்டரிடம் சண்டைப் பயிற்சியும் பெற்றிருக்கிறார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த 'வெளுத்துக்கட்டு' படத்தில் நடிக்க முதல் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 'அட்டக்கத்தி', 'தடையறத் தாக்க', 'தோனி', 'வத்திக்குச்சி', 'யாகாவாராயினும்', 'கதை சொல்லப் போறோம்' போன்ற படங்களிலும் நடித்தார்.
ரஞ்சித் இயக்கத்தில் அட்டக்கத்தி திரைப்படத்தில் ஹீரோவின் அண்ணனாக நடித்து கவனத்தை ஈர்த்தவர், இப்போது கபாலியில் நடித்ததன் மூலம் சினிமா உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிந்தவண்ணம் இருக்கிறதாம் இவருக்கு.
அவரிடம் பேசியபோது “என்னோட வாழ்க்கையில் 'கபாலிக்கு முன், கபாலிக்குப் பின்' என ரெண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் படத்தில் நடிச்சவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு ரஞ்சித் அண்ணன் எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்தாரு. எனக்கு கொடுத்ததை திருப்தியாகப் பண்ணியிருக்கிறதா நம்புறேன். திருநெல்வேலி சொந்த ஊராக இருந்தாலும், சென்னை ஸ்லாங் பேசி நடிச்சது எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. 'அட, நல்லா வந்திருக்கு சூப்பர்'னு ரஜினி சார் பாராட்டினாரு.
படம் பார்த்த உடனே லதா மேடமும் சுதா மகேந்திரன் மேடமும் ஃபோன் பண்ணி 'நல்லா பண்ணியிருக்கிங்க. உங்களுக்கு நல்ல வருங்காலம் இருக்கு'ன்னு பாராட்டினாங்க. தாணு சார் அவரோட ஆபிஸ்க்கு கூப்பிட்டு 'நல்லா பண்ணியிருக்கிங்க தம்பி. இந்த வேகத்தை எப்பவும் விட்டுடாதிங்க'ன்னு பாராட்டினார். யார்யாரோ தெரியாதவங்க எல்லாம் போன் பண்ணி பாராட்ட ஆரம்பிச்சுட்டாங்க.
கபாலியில் நடித்த இந்த ரோலுக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் தேடி வந்திருக்கு. வாழ்க்கையில் ஒரு படி மேலே வந்திருக்கிற மாதிரி உணர்வு. 'எந்த ரோல் வந்தாலும் உன்னால பண்ண முடியும். நல்ல கேரக்டரா தேர்வு செஞ்சி கான்ஃபிடன்ட்டா பண்ணு தம்பின்னு ரஞ்சித் அண்ணன் சொன்னாரு.” என்கிறார் மகிழ்ச்சியில்.
சென்னை கல்ச்சுரல் டீம், கபாலி படத்தில் சென்னை மொழியில் பேசி நடித்ததற்கு விருதும், சென்னை ரஜினி ரசிகர் மற்றம் 'ரஜினி' விருது, திருநெல்வேலி ரஜினி ரசிகர் மன்றம் 'சாதனையாளர்' விருது இவருக்கு கொடுத்திருக்கிறார்கள்.
அட்டக்கத்தி படத்தில் தினேஷ், மெட்ராஸ் படத்தில் கலையரசனைப் போல், கபாலி படத்தில் விஷ்வந்திற்கு வெளிச்சம் கிடைத்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.