மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இரட்டைச்சுழி, நெடுஞ்சாலை, மாயா உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஆரி. இவர் தற்போது இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட ஆரி, ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்யுங்கள் என்று வற்புறுத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக அவர் விவசாயி ரங்கநாதன் என்பவருடன் இணைந்து ஒரு ஏக்கர் பரப்பளவில் சேப்பங்கிழங்கு, வாழை, செம்பருத்தி, கற்றாழை பயிர்களை இயற்கை உரமிட்டு விவசாயம் செய்தார். அது இப்போது வெற்றி அடைந்துள்ளது. இந்த நிலத்தில் விளைந்த காற்கறிகளை விற்கும் அங்காடியை திறந்து வைத்தார். பின்னர் அவர் இதுபற்றி கூறியதாவது:
கடந்த ஆண்டு இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறிகளை பயிர்விக்குமாறு விவசாயிகளிடம் கோரிக்கை வைத்தேன். அதன்படி விவசாயி ரங்கநாதன் தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிரிட முன்வந்தார். அவருடன் சேர்ந்து அந்த நிலத்தில் சேப்பங்கிழங்கு, வாழை, செம்பருத்தி, கற்றாழை உள்ளிட்ட பயிர்களை நட்டோம். தற்போது அந்தப் பயிர்கள் மூலம் விவசாயி ரங்கநாதனுக்கு 25 ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளது.
மேலும், இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகளை தனது நிலத்தின் முன்னாலேயே ஆரி பசுமை அங்காடி எனும் பெயரில் விற்பனைக்கும் வைத்துள்ளார் ரங்கநாதன். அந்த அங்காடியை திறந்து வைத்தேன். விவசாயி ரங்கநாதனுக்கு வேளாண் அதிகாரிகள் மூலமாக லோன் கிடைத்துள்ளது. முதல் தவணையாக ரூ.40 ஆயிரத்தை அதிகாரிகளிடம் இருந்து பெற்றுள்ளார். நிலத்தில் பயிர்செய்து, அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளை ஆய்வு செய்த அவர்கள், ஆரோக்கியமான காய்கறிகள் என்றும் கூறியுள்ளனர். மேலும் அந்த மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளை அழைத்து வந்து பயிர்களை பார்வையிட்டுள்ளனர். இயற்கை மாற்று விவசாயம் குறித்தும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயி ரங்கநாதன் விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் இனிமேலாவது நீங்களே பயிர்செய்து இனி நேரடியாக நீங்களே விற்பனை செய்ய முடியும். அதற்கு உதாரணம் இதோ விவசாயி ரங்கநாதனே இருக்கிறார். திருவண்ணாமலையில் ஏற்பட்டுள்ள இந்த சிறிய மாற்றம் படிப்படியாக தமிழகம் முழுக்க பரவும். இவ்வாறு ஆரி தெரிவித்தார்.