நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் |
கர்நாடகா மாநில அரசின் தலைமை செயலர் அரவிந்த் ஜாதவ் தாயாரின் சர்ச்சைக்குரிய வீட்டு மனைப் பிரிவில், நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா
ஆகியோரும், மனை வாங்கியுள்ளது, தற்போது தெரியவந்து உள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது; மாநில அரசின் தலைமை செயலராக, அரவிந்த் ஜாதவ் பணியாற்றுகிறார். இவரது தாயார் ரா பாய், தேவனஹள்ளி அருகிலுள்ள ஹெக்கனஹள்ளி யில், 16 ஏக்கரில், வீட்டு மனைப் பிரிவை அமைத்து, பலருக்கு விற்பனை செய்துள்ளார்.
விவசாய நோக்கத்துக்காக, 1985ல், இந்த நிலத்தை வாங்கிய தாரா பாய், அதன் பின், அதை, வர்த்தக நிலமாக மாற்றினார்; பின், அந்த நிலத்தில், லேஅவுட் அமைத்து, பலருக்கு விற்பனை செய்துள்ளார். இதற்கிடையே, தாரா பாய்க்கு, 85 வயதாகிறது; அவரால், ரியல் எஸ்டேட் தொழிலை தனியாக செய்ய முடியாது; அவரது உறவினர்கள் இதன் பின்னணியில் செயல்பட்டிருக்கலாம். தலைமை செயலர் அரவிந்த் ஜாதவ், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ஆவணங்களில் முறைகேடு செய்து, இந்த நிலத்தை ஆக்கிரமித்துள்ளார் என, புகார் எழுந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்த, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தாரா பாயின், வீட்டு மனைப் பிரிவில், நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம்சரண் தேஜா, சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டு இந்தியர்கள் உள்ளிட்டோரும், மனை வாங்கியுள்ள தகவல், தற்போது வெளியாகியுள்ளது. இதற்கிடையே, மனைகள் விற்கப்பட்டதாக கூறப்பட்டாலும், தேவனஹள்ளியில் உள்ள நிலம் இன்னும் தாரா பாய் ஜாதவ் பெயரிலேயே இருப்பதாகவும், நிலம் வாங்கியவர்கள் பெயருக்கு முறைப்படி மாற்றவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.