மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்க கடந்த மார்ச் மாதத்தில் திடீரென ஆரம்பமான படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷா எனத் திரையுலகமே ஆச்சரியப்பட்டது. அதற்கேற்ற விதத்தில் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. திடீரென அந்தப் படம் அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டது. கௌதம் மேனன் சிம்புவை நாயகனாக வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தை முடிக்கப் போய்விட்டார். கடைசியில் சிம்புவுடன் பிரச்சனை வர தற்போது அந்தப் படமும் ஒரு பாடல் காட்சிக்காக நின்று போயுள்ளது.
இதனிடையே, கௌதம் மேனன், தனுஷ் இணைந்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்கு என்ன ஆயிற்று என்று தெரியாத நிலை உருவாகியுள்ளது. சுமார் 40 சதவீதம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ள படம் இனி தொடருமா, தொடராதா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. தனுஷ், வெற்றிமாறன் இயக்கத்தில் 'வட சென்னை' படத்தில் நடிக்கப் போய்விட்டார். அந்தப் படத்திற்காக அவர் கெட்-அப் வேறு மாற்றியுள்ளார். அப்படியிருக்க, அவர் மீண்டும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் இப்போதைக்கு கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்கிறார்கள்.
மேலும், அண்ணன் செல்வராகவனுக்கு ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தால் கௌதம் மேனன் படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட் தருவதாக தனுஷ் சொன்னாராம். இப்போது செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படமும் முடிவடைந்துவிட்டது. ஒரு வேளை அந்தப் படத்தின் இசை வெளியீட்டின் போது கௌதம் மேனனோ, தனுஷோ 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் எதிர்காலத்தைப் பற்றி அறிவிப்பார்கள் என்றும் தெரிகிறது.