விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், நிகழ்ச்சி தொகுப்பாளர், மேடை பேச்சாளர் என பல தளங்களில் செயல்பட்டு வருகிறார் பார்த்திபன். அவர் இயக்கும் படங்கள் வெற்றியோ, தோல்வியோ, ஆனால் கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் வித்தியாசமாக இருக்கும்.
இதனிடையே பார்த்திபனின் கலைச் சேவையை பாராட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இயங்கி வரும் ரோஸ்டன் அக்ரிட்டேஷன் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பு, மாறுபட்ட இயக்குனர் என்ற விருதை வழங்கி உள்ளது. இதனை அந்த அமைப்பின் இயக்குனர் பார்த்திபனிடம் வழங்கினார்.
தங்கமுலாம் பூசப்பட்ட தகட்டில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுக்கான காரணத்தை விளக்கமா எழுதியும் கொடுத்துள்ளனர். கமலஹசானுக்கு செவாலியே விருது கிடைத்தது குறித்து சிலாகித்து பாராட்டிவிட்டு தனக்கு கிடைத்த விருதை "ஏழைக்கு கிடைத்த எள்ளுருண்டை" என்று தனக்கே உரிய பாணியில் வர்ணித்துள்ளார் பார்த்திபன்.