‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழில் 'யாருடா மகேஷ்' படத்தில் நடித்தவர் சந்தீப் கிஷன். பக்கா சென்னை பையன். ஆனால் 'யாருடா மகேஷ்' வெற்றி பெறாததால் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் அங்கு முன்னணி நடிகர் ஆகிவிட்டார், 'ஷோர் இன் தி சிட்டி' என்ற பாலிவுட் படத்தில் நடித்து அதுவும் ஹிட்டாகி விட்டது. சொந்த மண்ணில் ஜெயிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. தற்போது 'மாயவன்' படத்தில் நடித்து வருகிறார். அதன் மூலம் தமிழில் நல்ல இடம் கிடைக்கும் என்று நம்புகிறார்.
தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கும் 'மாயவன்' படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதற்காக உடல் எடையை அதிகரித்து முறுக்கு மீசை வளர்த்து நடிக்கிறார். ஹீரோயின் லாவண்யா மனநல மருத்துவராக நடித்துள்ளார். பன்ஞ் டயலாக் பேசி ஒன்ட்றை டன் வெயிட்டில் அடித்து ஹீரோயிசம் பண்ணாமல் யதார்த்தமான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இது தவிர தமிழ், தெலுங்கில் தயாராகும் 'மாநகரம்' படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழில் நடிக்க நல்ல கதைகளை தேடிக் கொண்டிருக்கிறார்.