மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மலையாளத்தில் சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் ஐஸ்வர்யா மேனன். அப்படி அவர் வந்தபோது எதிர்பார்த்தபடி கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யனும் குமாரு, ஆப்பிள் பெண்ணே உள்ளிட்ட சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த அவர், தற்போது கழுகு கிருஷ்ணாவுடன் வீரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கல்லூரி பெண்ணாக மாடர்ன் கெட்டப்பில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன் இதையடுத்து சில படவாய்ப்புகள் அவரைத் தேடிச் சென்றபோது திருப்பி அனுப்பி விட்டாராம்.
அவரிடம் அதுகுறித்து கேட்டபோது, மலையாள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் பெரிய இடம் கிடைத்து வருகிறது. அதனால் நானும் பெரிய நடிகையாக வேண்டும் என்றுதான் கோடம்பாக்கத்துக்கு வந்தேன். ஆரம்பத்தில் நான் எதிர்பார்த்தபடி படங்கள் கிடைக்கவில்லை என்றபோதும், இப்போது கழுகு கிருஷ்ணாவுடன் வீரா படத்தில் நடிக்கிறேன். ரொம்ப நல்ல வேடம். அதனால் இதன்பிறகு இன்னும் பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்தால்தான் நான் அடுத்த லெவலுக்கு செல்ல முடியும். அதனால்தான் சில பிரபலமில்லாத ஹீரோக்களின் படங்களில் நடிக்க அழைப்பு வந்தபோது மறுத்து விட்டேன்.
மேலும், சினிமாவைப்பொறுத்தவரை முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தால்தான் பெரிய இடத்துக்கு வர முடியும். இல்லையேல் மூன்றாம்தட்டு நடிகையாகத்தான் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால்தான் நான் உசாராக செயல்பட்டு வருகிறேன் என்கிறார் ஐஸ்வர்யா மேனன்.